Saturday, April 16, 2022

ராஜபக்ஷ குடும்பத்தினரை கதிகலங்க வைத்த அனானிமஸ் யார்?


A.M.Hafeesul haq (Fathihi) 
Varipathanchenai.  

உண்மையில் யார் இவர்கள் ? 

(Anonymous hacktivist collective)  இது ஹெக்கர்கள் கூட்டு நிழலுக குழு.  
உலகம் முழுக்க இருக்கும் தலை சிறந்த கணணி ஹெக்கர்களைக் கொண்ட மிக சக்தி வாய்ந்த குழு.  அதிகார அத்துமீறலுக்கு எதிரான கொள்கை கொண்ட ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கும்  கணினி ஜாம்பவான்களைக்  கொண்ட குழு. இந்த அமைப்பு ஒருவரால் நிர்வகிக்கப்படவில்லை.  இந்த அமைப்பிற்கு கென்று  தனிப்பட்ட நாடும் இல்லை.  உலகம் முழுவதும் இந்த அமைப்பு வியாபித்து காணப்படுகிறது. நாங்கள் பெரும் படை என்பது இவர்களின் வாசகம் (we are legion) கய் பாவ்கிஸ் மாஸ்க்"  (Guy Fawkes mask) என்பது இவர்களின் அடையாளம் " 

பல நாட்டு அரசுகளை நிறுவனங்களை தங்களின் ஹெக்கிங் மூலம் ஆட்டிப்படைக்கும் இவர்கள் மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர்கள். தங்களது சைபர் தாக்குதல்மூலம் (Cyber war)  நீதியை பெற்று தருவது சர்வாதிகார ஆட்சியை ஒடுக்குவது போன்றவையே இவர்களின் செயற்பாடு . இவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு ‘4chan’ என்ற வலைதளத்தில் இருந்து அனானிமஸ் ஹெக்டிவிஸ்ட் கலெக்டிவ் (Anonymous hacktivist)  என்ற பெயரில்    முதன்முறையாக தோற்றம் தோற்றம் பொற்றார்கள். 
இவர்களுக்கு பல சமூக ஊடக கணக்குகள் இருக்கின்றன. மேலும்  இவர்களுடைய ட்விட்டர் பக்கத்தை 15.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

கடந்த காலங்களில் பண்டோரா பேப்பர்ஸ், பனாமா பேப்பர்ஸ், விக்கிலீக்ஸ் பற்றிய ஆச்சரியமான தகவல்களை வெளியீட்டு உலக மக்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றார்கள். 

இவர்கள் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யப் படையினரின் தகவல்கள், பெயர்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வெளியீட்டும், 
குறிப்பாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள், 40க்கும் அதிகமான வங்கிகள் என்று 300 பக்கங்களை ஹெக் செய்துள்ளதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது. 

எங்கள் நாட்டில் எதிர்பார்க்காத அளவிற்கு சைபர் தாக்குதல் நடக்கிறது என்றும்  இதனால் எங்களது நாட்டிற்கு பல கோடி நஷ்டம்  என்றும் ரஷ்ய நாட்டு பாதுகாப்பு துறையும் ஒப்புக்கொண்டு உள்ளது. 

 
இவ்வாறு இருக்க  சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை அனானிமஸினால்  “பன்டோரா ஆவணங்கள்”  மூலம் அண்மையில் வெளியிட்டப்பட்டது. 

இதில்  தெற்காசியா நாடான இலங்கையின்  ஊழல் ஆட்சியாளர்களின்  சொத்து விபரங்களையும் வெளியிட்டு ஆசியா நாடுகளில் பிரசித்திபெற ஆரம்பித்தது. 

அதற்கமைய பன்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் முன்னாள் நிதி  பிரதி அமைச்சரும், இலங்கையின் தற்போதை அதிபரின் உறவினருமான
நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) 35,000,000,000 ரூபாய் சொத்து மதிப்பீட்டை வெளியீட்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி 2022 பெப்ரவரியில் தேசிய பணவீக்க விகிதம் 17.5% ஆக அதிகரித்துள்ளது.  51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன்  களுத்தை நெரித்துள்ளது. இவ்வாறு   இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை தொட்ட நிலையில்  பொருட்களின் விலையேற்றம்,  மொத்த உள்நாட்டு உற்பத்தி பாரிய சரிவு , சமையல் எரிவாயு தட்டுப்படு, போதிய இறக்குமதி இல்லை, நாளுக்குநாள் வாழ்கைச்செலவு கூடிக்கொண்டு செல்கிறது.  மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அயல் நாடுகளுக்கு
 செல்கின்றனர்....

இன்னொரு புறம் நாடுபூராக கோத்தா அரசு நாட்டை வெளியெறங்கவேண்டும் (Gota Go Home ) என்ற கொஷத்துடன் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில்   அனானிமஸ் (Anonymous)  குழு இலங்கை அதிபருக்கும் ராஜபக்ஷ அரசுக்கும் 14 நாள் அவகாசத்தை  கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 

14 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு புதியவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்ஷ குடும்பம் பற்றிய அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனவும் எச்சரித்துள்ள நிலையில்  ராஜ மக்ஷ குடும்பத்தின் உகண்டாக  பினாமிகள் சம்பந்தமான புதிய செய்தியையும் வெளியிட்டுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 3 சரக்கு (காகோ) விமானங்களின் மூலம் 102 டன் கரன்சிகள் உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. அது மாத்திரம்ல்லாம் ராஜபக்ஷ குடும்பத்தின் பல நிறுவனங்கள் பினாமியூடாக செய்ற்பட்டு வருவாதாக தகவல்களும் வெளியாகியுள்ளது. 

* செரினிட்டி குரூப் லிமிடெட்
Serenity Group Limited, Plot 20, 30 Naggulu Vale Road, Kampala, Uganda
 
* தரையில் கான்கிரீட் உற்பத்தி வேலைகள் (கிழக்கு ஆப்பிரிக்கா கான்கிரீட் தயாரிப்புகள் லிமிடெட்)
EACPL, East Africa Concrete Products Limited, 2 Naguru Dr, Kampala, Uganda
 
* ரியல் எஸ்டேட் நிறுவனம் ( ரியல் எஸ்டேட் நிறுவனம் )
iBM Ready Mix Concrete Supply Company Ltd, Kampala, Uganda
 
*நைல் ஹெவி இன்ஜினியரிங் நிறுவனம் (NILE ஹெவி இன்ஜினியரிங் நிறுவனம்)
NILE HEAVY ENGINEERING Ltd.
 
*கஃபே சிலோன் நிறுவனம்
CAFÉ CEYLON Ltd.
 
*எலிட்ரோ குளோபல் நிறுவனம்
Elitro Global Private Limited
 
*ரோஸ்மோர் எஸ்டேட்ஸ் நிறுவனம்
Rossmore Estates Pvt Limited
 
*ரெடெக்ஸ் நிறுவனம் (குளோபல் ரேடெக்ஸ் நிறுவனம் )
Global redex Uganda Ltd.
THE BAKEHOUSE Ltd.
Steel Pole Construction Uganda Ltd.
Serenity Solutions Co Ltd, Kampala, Uganda

இந்த நிறுவனங்கள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானவை எனவும் 
ஆனால் இதன் பணிப்பாளர்களாக வேலுப்பிள்ளை கணநாதன் 
தேவக மற்றும்  ருவன் ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.எனவும் பல செய்திகள் மற்றும் அதனை உறுதிசெய்யும் ஆவணங்களும் வெளியாகியுள்ளது. 

அனானிமஸின் செயற்பாடு இலங்கையின் ராஜபக்ஷ குடுப்பத்திற்கு பாரியோதோர் அச்சுறுத்தலாக மாறியுள்ளது... 

Saturday, February 12, 2022

அரைகுறையாக ஆடை அணிவதுதான் நாகரிகத்தின் உச்சம் என்று நீங்கள் கருதுதினால் மிருகங்கள் உங்களைவிட நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.”

A.M. Hafeesul haq (Fathih institute of High Education) 


அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹிஜாபுடன் நுழைந்து முதல் பெண் கலாநிதி டாலியா முஜாஹிதா! 

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிடம் அமெரிக்க ஊடகவியலாளர் 
அவரது ஆலோசகரான கலாநிதி டாலியா முஜாஹிதா அவர்கள் அணிந்திருக்கும் ஆடை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

''உங்கள் ஆலோசகர் கலாநிதி டாலியா முஜாஹிதா அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவு கூர்மையுடன் ஒத்துப்போகவில்லையே'' என்று
 கேள்வி கேட்கப்பட்டது . 

ஹிஜாப் என்பது அறியாமை கால யுகத்தின் ஆடை என்ற தொனியில் இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது. அப்போது டாலியா முஜாஹிதா அவர்கள் இக்கேள்விக்கு மிகவும் அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார். 

கலாநிதி டாலியா முஜாஹிதா பதிலளிக்கின்றபோது “முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகையான ஆடைப் பயன்பாட்டை கண்டுபிடித்து அவற்றை அணியவும் கற்றுக்கொண்டான்.  

இவ்வாறு மனித குலம் ஆடை அணியத் தொடங்கி முன்னேறியதின் காரணமாக நாகரிகத்தின் உச்சக்கட்ட ஆடையான ஹிஜாபைதான் நான் இப்போது  அணிந்து உள்ளேன்.எனவே இது ஒரு பிற்போக்கு ஆடையல்ல. நிர்வாணகோல ஆடைகள்தான் முதலாம் நூற்றாண்டை ஞாபகப்படுத்தும் பிற்போக்கு ஆடைகள்.

அரைகுறையாக  ஆடை அணிவதுதான் நாகரிகத்தின் உச்சம் என்று நீங்கள் கருதுதினால் மிருகங்கள் உங்களைவிட நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.” 

கொடுத்த பதிலில் ஊடகவியலாளர்க் வாயடைத்துப்போனார்கள். இது ஹிஜாபை கழைந்தெறிய கோஷம்போடு காவி ஷங்கிகளுக்கு சமர்ப்பணம்.

Thursday, April 15, 2021

ஒரு நாள் நோன்பு வைப்பவரின் கூலி என்ன தெரியுமா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு வைக்கின்றாரோ  அல்லாஹுத்தாலா  அவருடைய முகதாதை நரகில் இருந்து 70 வருடங்கள் தூரமாக்குகின்றான்.
( புஹாரி) 
சுப்ஹானல்லாஹ் ! 

 من تقرب فيه بخصلة من خصال الخير كان كمن أدى سبعين فريضة فيما سواه 
70 பர்ளுட் நன்மை ( இன்று ஹுஸைமா)

Tuesday, September 1, 2020

மேற்குலகால் மறைக்கப்பட்ட முஸ்லிம் மருத்துவ மேதை முஹம்மத் அத்தமீமி


பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த மருத்துவ மேதைகளில் இவரும் ஒருவர்.

அபூ  அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு ஸயீத் அத்தமீம் என்பதுவே இவரின் முழுப்பெயராகும். 
பலஸ்தீன் ஜெருசலத்தில் பிறந்த இவர்  970 இல் எகிப்திற்கு குடிபெயர்ந்து மரணமடையும் வரை அங்கு வாழ்ந்தார். 

மருத்துவ துறையில் ஆழ்ந்த அறிவும் நீண்ட அனுபவமும் கொண்ட இவர். மருத்துவவியலின் பல்வேறுபட்ட துறைகள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். 

இவர் எழுதிய நூல்களில் மருந்தியல் பற்றிய ' கிதாபுல் முர்ஷித் இலா ஜவாஹிருல் அத்தியா குவா அல் முப்ரதாத் , 
( உணவுப் பொருள்கள் மருந்துக்கள் ஆகியவற்றின் விளக்க நூல்) எனும் நூல் குறிப்பிடத் தக்கவையாகும். 


இந்நூல் தாவரங்கள், கனிப்பொருள்கள் ,விலங்குகள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான மருந்துகள் பற்றியும் , உணவுப் பொருட்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
இவர் பத்தாம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் மரணமடைந்தார். 

A.M. ஹபீஸுல் ஹக் 
வரிப்பத்தான்சேனை. 

Tuesday, May 19, 2020

கலாநிதி எம்.ஏ.எம். சுக்கரியின் மறைவு இலங்கையின் கல்விச் சமுகத்தில் ஓர் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி இலங்கையின் மூத்த இஸ்லாமி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர். பாரம்பரிய சூபித்துவ சிந்தனையில் துறைசார்ந்து இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்.

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியை நான் நேரில் கண்டதில்லை. அவருடை விரிவுரையிலும் நான் இருந்ததில்லை. எனது குடும்பத்திற்கும், எனது ஊரிற்கும் ஜாமிஆ நளீமியா தொடர்பு அதிகம் உள்ளது. மறைந்த எனது சகோதரர் #அஷ்ஷெய்க்_லாபிர் ( நளீமியின் ) சிந்தனைத்தாக்கம் நளீமிக்கள் பற்றியும், அதன் விரிவுரையாளர்கள் பற்றியும் , #நளீம் ஹாஜியார் பற்றியும், கலாநிதி #சுக்ரி பற்றியும் நல்ல எண்ணத்தை எனது குடும்பத்தில் ஏற்படுத்தியது.

இந்த சிந்தனைத் தாக்கம் என்னையும் தாக்கியது. கலாநிதி சுகரி பற்றிய தேடலையும் அவரது கட்டுரைகள் மற்றும் அவரது புத்தகங்களை வாசிக்கும் வேற்கையும் எனக்குள்அதிகரித்தது. ஜாமியா நளீமியாவில் செல்ல வேண்டும் என்ற ஒரு இலக்கும் தோன்றியது பின்னர் தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் அது தடைப்பட்டது. 

கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரியின் சிந்தனைப் பாரம்பரியமும். அவரது வரலாற்று  அணுகுமுறைம் உண்மையில் விசித்திரமானது. எனது பாதிஹ் கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளரும், இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய நாகரீக பாடத்தின் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் பாரி ( நளீமி) அவர்கள் எமக்கு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று என்ற பாடத்தை நடத்தினார்.  அப்பாடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது  இலங்கையில் வரலாற்றுத் துறையில்  பிரசித்தி பெற்ற முஸ்லிம்கள் யாரும்  இருக்கின்றார்களா ? என்று கேட்கப்பட்டது அவர் சிரித்திவிட்டுச் சொன்னார் தற்போதைக்கு #கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியைத் தவிர யாரும் இல்லை  என்று  ஏக்கத்துடன் சொன்னார். 

நல்லதோர் சிந்தனையாளர் சகோதரர் நண்பர் Lafees shaheed உடைய ஒரு பதிவில்  கலாநிதி  எம்.ஏ.எம். சுக்ரியின் சிறப்புத் துறை சூபித்துவம். சூபித்துவம் குறித்து அவர் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகத்தான் எழுதியுள்ளார். 

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி சூபித்துவத்தின் தத்துவம் மற்றும் இறையியல் பற்றி பேசிய இமாம் கஸ்ஸாலி, முஹ்யித்தீன் இப்னு அரபி, அப்துல் கரீம் ஜீலி போன்றவர்களை நன்கு கற்றவர். ஆன்மீக பின்புலம் இல்லாமல் சூபித்துவத்தை புரிந்துகொள்வது மிகவும் கடிணம், தீராத முயற்சியால்  சூபிதத்துவத்தை புரிந்து கொண்ட இவருடைய சிந்தனையை நவீன இஸ்லாமிய சிந்தனை சமுகம்  வெறுமென ஆன்மீகப் பயிற்றுவிப்பு என அணுகியது. இவருடைய இந்த விருப்புரிமை கொடையை ஜாமிஆ நளீமியாகூட புரிந்துகொள்ளவில்லை என்பது மகத்தான மனவேதனை. என்கின்றார். 

மேற்குறிப்பிட்ட விடையங்கள் முற்றிலும்  எதார்தமானவை. கலாநிதி எம்.ஏ.எம். சுக்கிரியின் அறிவியல் பங்களிப்பை ஒருபோது எமக்கு அளவிடமுடியாது. 
இவருடைய இந்த  அறிவியல்  இடத்தை நிறப்புவதற்கு இலங்கை முஸ்லிம் என்றவகையில் எமக்கு ஒருதாசப்தத்கால அளவைவிடவும்  இடைவெளி அதிகரிக்கலாம்! 

அல்லாஹ் அன்னவருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் என்ற உயர்ந்த சுவர்கத்தை வழங்குவானாக!

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் 
( பாதிஹி)


Sunday, March 22, 2020

மூன்றாம் உலகப்போரிற்கு தயாராகும் வளர்முக நாடுகள் ( biological war )

போர் என்கின்ற போது எங்களுடைய சிந்தனையில் பொதுவாக உதிப்பது ஆயுதமுணையில் போராடுவது மாத்திரம்தான் போர் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படியல்ல மனிதனுக்கு மத்தியில் போட்டிகளும்,பொறுமைகளும் உருவான காலம் கடந்து இன்று நாடுகளுக்கிடையில் அதிகாரப் பரவல்கள் போட்டி போட்டு வளர ஆரம்பித்துள்ளது. இந்த அதிகாரப் பரவல்கள் நாடுகளுக்கிடையில் போர் இடம்பெறுவதற்குக் காரணமாக அமைகிறது.

ஆரம்ப காலத்தில் கப்பல் கட்டும் கைதொழிலிற்கும் ஆயுத உற்பத்திற்கும் கவனம் செலுத்திய நாடுகள் இன்று யுரேனியம், அணு ஆயுதம் ,தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. 

 பொதுவாக biowar என்பது  
biological warfare என்பதன் சுருக்கமாகும்.  ஒரு நாடு தனது எதிரி நாட்டின் மீது தொடு க்கும் போர் முறைகளில் இதுவும் ஒன்றாகும். கொடிய வியாதியை உண்டாக்கக் கூடிய இலகுவாக பரவக்கூடிய பக்டீரியாக்களை அல்லது வைரஸ்களை கண்டு பிடித்து அதை ரகசியமாக தனது எதிரி நாட்டில் பரப்பிவிடு வது .மனிதர்கள் ,பிராணிகள்,
பயிர்கள் போன்றவற்றின் மீது பரப்பிவிட்டு பெரும் சேதத்தை  விளைவித்து எதிரி நாட்டை நிலை குலையச் செய்கின்ற செயலே இதுவாகும்.  

எடுத்துக்காட்டாக  சின்னம்மை
நோயை உருவாக்கும் 
வரிசெல்லா ஜோஸ்டர் ( Varicella Zoster )  எனும் வைரஸ் இந்த வைரஸினால் சுமாராக 
 300 மில்லியன் மக்கள் சின்னமை நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.  
உயிர்க்கொல்லி நோய் என்று சொல்லுமளவுக்கு உயிர்ப்பலி வாங்கிய ஒன்று. 

இது குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகத் தாக்கும். ஐந்து முதல் பத்து நாள்கள் வரை உடலில் தங்கியிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மனிதரிடமிருந்து தும்மல், சளி, இருமல் வழியே மற்றொருவருக்குப் பரவக்கூடியது. 

உடலினுள் சென்று மூன்று வாரத்தில் இந்வைரஸ் தன்னுடை பாதிப்பைக் காட்ட ஆரம்பிக்கும். அதிகபட்சமாக, 102 டிகிரி வெப்பம் வரை காய்ச்சல் அடிக்கும். தொண்டை, நுரையீரலில், தோலில் புண்களை ஏற்படுத்தும். இது நரம்பியல் மண்டலத்தைத் தாக்க வாய்ப்புகள் உண்டு. மூளைக் காய்ச்சல், நிமோனியா மற்றும் சிறுமூளைப் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால்
சின்னம்மையை உயிர்கொல்லி நோயாக பார்த்தார்கள். 
 இந்த அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த நோய்கான தடுப்பூசியை 1980 ஆண்டின் தொடக்கத்தில் கண்டுபிடித்து வைரஸ் கிருமியை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டார்கள். என்றாலும்
அந்த வைரஸ் கிருமியின் சில சாம்பிள்கள் மாத்திரம்  ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக  சேமித்து வைத்துள்ளார்கள். 

இப்போது பிரச்சினை என்னவென்றால் 1980
ஆண்டுக்குப் பிறகு பிறந்த யாருக்கும் சின்னம்மை நோய்க்கான தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், இத்தகைய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் தீவிரவாத இயக்கங்களின் பிடியில் சிக்கி பயோ வார் ஆயுதமாக (Bio-war Weapon) மாற வாய்ப்புள்ளது" என்று அமெரிக்காவின்  ( FDA )  என்ற ஒரு நிறுவனம்  தகவல் வெளியிட்டுள்ளது. இன்னிலை தோன்றினால் எப்படியான  விளைவுகள் தோன்றும்?

ராஷ்யாவிற்கும்  அமெரிக்காவிற்கும் முறுகல் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் முறுகல் வல்லரசு நாடுகளின் பணிப்போரில் பலிகடாவாகும் வளர்முக நாடுகள்
இதன் விளைவே கொரோனா வைரஸ் Covid-19  என்று பலரால் பேசப்பட்டு வருகிறது.  எது எவ்வாறாக இருந்தாலும்  எமது முஸ்லிம் நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  

Ash Sheikh Hafeesul haq ( Fathihi)
Varipathanchenai



Thursday, October 10, 2019

வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தை தரம் உயர்த்த உதவுங்கள்
=================================

வரிப்பத்தான்சேனையில் உப அஞ்சல் அலுவலகம்  அமையப்பெற்றது எமது ஊருக்குக் கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம்.   ஆனால் இப் பொக்கிஷம் எமது  மணில் மறைந்து கொண்டு வருகின்றது.

எமது  உப அஞ்சல் அலுவலகம் 1958 .09.02.  திகதி ஆரம்பிக்கப்பட்டது. இவ் அலுவலகத்தின் முதலாவது தபால் உத்தியோகத்தராக ( PM) H உமர்லெப்பை கடமையாற்றினார். இவர் சுமார் 35 வருடங்கள் கடமை புரிந்தார். இதன் பின்னர் அப்துல் வாஹித் அவர்கள் சுமார் இரண்டு வருடங்கள் கடமை புரிந்தார். இதன் பின்னர் T  அபுல் காசிம் அவர்கள் 15 வருடங்கள் கடமைபுரிந்தார். அன்றில் இருந்து இனுறுவரைக்கும் A.C.M. தெளபீக் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.

எமது வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தில்  உள்ளடங்கும் பகுதிகளாக வரிப்பத்தான்சேனை முதலாம், இரண்டாம் , மூன்றாம் பிரிவுகள் , இறக்காமம் 5ம் பிரிவான நியூகுன, குடுவில், நல்லதண்ணிமலை, மாணிக்கமடுவ. கல்மடு போன்ற கிறாமங்கள் உள்ளடக்கப்படுகின்றது.

*  இன்று இதில்  சிரேஷ்ட பிரஜைகளுக்கான   கொடுப்பனவாக சுமார் 96 பேர்   எமது ஊரைச்சேர்ந்தவர்கள் பயனடைகின்றார்கள்.  ( 70  வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கான கொடுப்பனவு )

*   பொதுசன உதவி மாதாந்த கொடுப்பனவாக ( பிச்ச சம்பளம்)  258 பேர் எமது ஊரைச்  சேர்ந்வர்கள் பயனடைகின்றார்கள்.

* புற்று நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளை சுமார் 05  பேர்  எமது ஊரைச் சேர்ந்தவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.

* கிட்னி நோயாளிகளுக்கான கடுப்பனவை ஒருவர் பெற்றுக் கொள்கின்றார்.

இப்படி எமது ஊருக்கு சேவை செய்யும் உப அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய  நிலை படு மோசமாகவுள்ளது . வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளது. வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தில்  வந்த இந்தவருடத்துக்கான வரவுசெலவுகள் பின்வருமாறு .

1) ஜனவரி
வரவு 15395.16 
செலவு 39165.8
லொஸ்ட்  23769.92/=

2) பெப்ரவரி
வரவு     15100.70
செலவு  38838.44
லொஸ்ட்  23737.74

3) மார்ச்
வரவு    
செலவு 
லொஸ்ட்